தஞ்சாவூர், ஜன.16 - தஞ்சாவூர் பழைய ஆட்சியர் அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில், ஒருங்கி ணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் ராபர்ட் சிஷோலம் என்பவரால், 1896 முதல் 1900 கால கட்டத்தில் கட்டப்பட்டது. இது இந்தோ-சாரா சனிக் கட்டிடக்கலை பாணியை சார்ந்தது. இந்த கட்டிடத்தில் சுமார் 120 ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ், ரூ.8.4 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி., சண் முகம், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகரன், நீல மேகம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். வேளாண்துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக் காவிரி முதல் பூம் புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறு களின் செயல்பாடுகள் குறித்து செயற்கை முறை யில் தத்ரூபமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன. மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நூலக காட்சி யகம், 7டி திரையரங்கம் உள்ளிட்டவை அமைக் கப்பட்டுள்ளன. மேலும், 20 நாடுகளைச் சேர்ந்த 600 வகையான பறவைகள் கொண்ட ‘ராஜாளி பறவைகள் பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பணி யாற்றிய பணியாளர்களின் புகைப்படங்கள், சோழர் கால நீர் மேலாண்மை குறித்த ஓவியங் கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அருங்காட்சியகத்தை பார்வையிட பெரிய வர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10, 7 டி திரையரங்கத்திற்கு 25 ரூபாய், பறவைகள் பூங்காவிற்கு 200 ரூபாய் என கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.