தஞ்சாவூர், ஜூன் 14 - ரத்த தானத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 14 உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் தஞ்சை கிளை சார்பில் தஞ்சையில் உலக ரத்த தான தின விழிப்புணர்வு நடைப்பயணம் செவ்வாயன்று நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு ஆலயத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேர ணியை, தஞ்சை காவல்துறை துணைத் தலை வர் கயல்விழி, குழந்தை இயேசு தேவாலயத் தின் பங்குத் தந்தை அம்புரோஸ், செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மரு. வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் மரு.பாலமுருகன், ரத்த மண்டல வங்கி மருத்துவர் மரு.ஆர்த்தி, அவசர சிகிச்சை துறை தலைவர் மரு.சர வணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர். நடைப்பயண சங்க உறுப்பினர்கள், ரோட்டரி - லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற நடைப்பயணம், மீனாட்சி மருத்துவமனை யின் வளாகத்தில் முடிவடைந்தது. மேலும் இந்தாண்டில் ரத்த தானம் வழங்கிய கல்லூரி களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.