districts

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் வெற்றி முறைகேடு செய்த கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர், ஏப்.27 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் எதிரொலியாக, கூட்டுறவு கடன் சங்க  செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில், கடந்த 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு  பயிர்கடன் தள்ளுபடியில் முறைகேடு  நடந்திருப்பதாகவும், தகுதியுள்ள வர்கள் நிராகரிக்கப்பட்டு, போலியான நபர்களுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்திருப்பதாகவும், இதில் பல லட்சம் முறைகேடு நடந்து இருப்பதாகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.  இதையொட்டி பல்வேறு கட்ட போராட் டங்கள் நடைபெற்றன. வட்டாட்சியர், கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் மண்டல  இணைப் பதிவாளர் தமிழ்நங்கை, முறை கேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செய லாளர் சத்தியமூர்த்தியை பணியிடை  நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள் ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை சரக துணை பதி வாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், ரெட்டவயல் தொடக்க வேளாண்  கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016, 2021  ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பட்டியலில், தகுதி பெறாத கரும்பு கடன் பெற்ற கடன்தாரர்களை சேர்த்து நிதி முறைகேடு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசா ரணை அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்ட ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செய லாளர் சத்தியமூர்த்தி பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் கூறுகையில், ரெட்டவயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு  நடந்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக சங்கத்தின் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வர வேற்கிறோம். ஊழல் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை, பாதிக்கப்பட்ட கடன் பெற்ற கரும்பு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  கோரிக்கையை ஏற்று இவ்விவகாரத் தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், நடவடிக்கை எடுத்த கூட்டு றவுத் துறை அலுவலர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.