districts

மேட்டூரிலிருந்து உபரிநீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூர், அக்.16 -  காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை யின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக  உள்ளது. அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளள வான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம்  ஆற்றில், 85,000 கனஅடி வரை திறந்து விடப்பட்டுள்ளது.  மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1.10 லட்சம்  கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக  இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க  வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24x7) இயங்கி  வரும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண். 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362- 264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை,  வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை  பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

;