தஞ்சாவூர், மார்ச் 28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி அருகே உள்ள ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங் கத்தில் கரும்புப் பயிர்க் கடனில் நடைபெற்ற மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் கூட்டு றவு துணை இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க் கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ரெட்ட வயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில், 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கரும்பு விவசாயிகளுக்கு தள்ளு படி செய்யப்பட்ட கடன் தொகை விவசாயிகள் கணக்கில் வரவு வைக் கப்படவில்லை. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். பல லட்சம் ரூபாய் மேசாடி நடந்துள்ளது என விவசாயி கள் பல்வேறு கட்டங்களில் போராட் டங்கள் நடத்தினர். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வட்டாட்சியர் சுகுமார், கூட்டுறவு துறை அதிகாரி கள் முன்னிலையில் பலகட்டப் பேச்சுவார்த்தையும் நடந்தது. நட வடிக்கை எடுக்கவில்லை. இதை யடுத்து கூட்டுறவு துணை இணைப் பதிவாளரைக் கண்டித்து, செவ் வாய்க்கிழமை தஞ்சாவூரில், இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு, ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பி னர்கள், பாதிக்கப்பட்ட கரும்பு விவ சாயிகள் மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட் டச் செயலாளர் என்.வி.கண்ணன், ஆர்.எஸ்.வேலுசாமி, எஸ்.கோவிந் தராஜ், எஸ்.ஞானமாணிக்கம், கோரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.