districts

மணக்காடு ஊராட்சியில் தெருநாய் தொல்லை

தஞ்சாவூர், மே.5- மணக்காடு ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வீதியில் செல்பவர்க ளை விரட்டி கடிக்கும் வெறிநாய்களால் பலரும் அவ திப்பட்டு வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த மணக்காடு ஊராட்சியில், பல்வேறு கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.  நெல்லையடிக்காடு, வீரக்குடி, மணக்காடு, பாங்கி ராங்கொல்லை, மேல மணக்காடு, கீழமணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், உரிய பராமரிப்பின்றி வீதிகளில் சுற்றித் திரிகின்றன.  இந்நிலையில், வியாழனன்று நெல்லைய டிக்காடு- வீரக்குடி பகுதியில் நடந்து சென்ற, அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மனைவி நீலா (35) என்ப வரை தெரு நாய்கள் துரத்திக் கண்டித்தன. இதில், வலது கையில் பலத்த காயம் அடைந்த அவர், பேரா வூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கிஅரசு மருத்துவமனைக்கு நீலா அனுப்பி வைக்கப்பட்டார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த சேகர் கூறுகையில், ‘‘மணக்காடு பஞ்சா யத்தில் பல்வேறு கிராமங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. பராமரிப்பின்றித் திரியும் இந்த நாய்கள் வெறிநாய்களாக மாறி உள்ளன. இவை, மற்ற நாய்களைக் கடிக்கும்போது அந்த நாய்களும் வெறிநாய்களாக மாறுகின்றன.  தெருவில் நடந்து செல்லும் பெரியவர்கள், குழந்தைகள், கால்நடைகளை கடித்துக் குதறி வைப்ப தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். வெறி நாய்க்கடி காரணமாக ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுத்து, பராமரிப்பின்றி வீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.