தஞ்சாவூர், ஜூலை 27 - உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், வர்ம போர்க்கள பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருச்சி அருகே லால்குடியில் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிப்பட்டி ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி மற்றும் கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் தனித்திறன் ஒற்றைக்கம்பு போட்டியில் வெற்றிப் பெற்றனர். மாணவர்கள் ராகுல், யோகேஷ், சூரிய பிரகாஷ், விஷ்வா, விஷாந்த் சுப்பிரமணி யன், திவ்யதர்ஷன், தமிழ்வேந்தன், சுகந்தன், பவித்திரன், ஹேமப்பிரியன், வினோத், மோகன், ஸ்ரீதர், கனிஷ்கர் ஆகியோர் முதல் பரிசையும், சஜித், இளங்கோவன், ருத்ரா, சினேகன், விஷாந்த், விக்னேஷ் ஆகியோர் 2 ஆம் பரிசையும், கவுசிகா, இனியாஸ்ரீ, மெர்லின், கரோலின்ஏஞ்சல், மெர்சிஆஞ்சலா, பிரவின்குமார் 3 ஆம் பரிசையும் பெற்றனர். ஆண்களுக்கான குழுப் போட்டியில் கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாண வர்கள் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் துளசி ராமனை, பள்ளி தலைமையாசிரியர் சந்திர மவுலி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.