தஞ்சாவூர், டிச.9 - 16 வயது பள்ளி மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டு நருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மாவட்டத் தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆக.12 ஆம் தேதி வீட்டில் இருந்து காணா மல் போய்விட்டார். இது குறித்து தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி காவல் நிலை யத்தில், மாணவியின் பெற் றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, பின்னர், இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர் விசா ரணை நடத்தியதில், காணா மல் போன மாணவி ஈரோட் டில் உள்ள ஒரு வீட்டில் இருப் பது தெரிய வந்தது. அதன்பே ரில், காவல்துறையினர் ஈரோட்டுக்கு சென்று அந்த மாணவியை மீட்டு தஞ்சாவூ ருக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில், ஆட்டோ ஓட்டுநரான தஞ்சா வூர் மனோஜிப்பட்டி கன்னி யம்மாள் நகரை சேர்ந்த பாண்டியன் (25) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாண வியை கடத்தி சென்று பாலி யல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து போக்சோ சட்டத் தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பாண்டி யனை கைது செய்து, தஞ்சா வூர் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து, மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த பாண்டியனுக்கு 20 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.