districts

கொரோனா காலத்தில் சமூக சேவையாற்றிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு பாராட்டு

கும்பகோணம், ஏப்.18 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மேலவீதி யில் அமைந்திருக்கும் ஸ்ரீ வடபத்திர மகாகா ளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதில் நாச்சியார்கோயில் பகுதியில் கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர் களுக்கு உணவு வழங்கியும், நோய்த் தொற்றி னால் இறந்தவர்களின் சடலங்களின் இறுதி  நிகழ்ச்சியை நடத்தி சமூக சேவையில் ஈடு பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக  தொண்டர்கள் பாராட்டி கௌரவிக்கப் பட்டனர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகி இயற்கை விவசாயி ராஜேந்திரன் தலைமை வகித்தார். விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஆனந்த்,  மணிவண்ணன் உள்ளிட்டோர், நாச்சியார்கோ யில் பகுதியில் கொரோனா நோயினால் இறந்த 49 சடலங்களை அடக்கம் செய்த தமுமுக தொண்டர்கள், ஊராட்சி மன்ற சமூக  சேவகர் உமாசங்கர், ஊராட்சி செயலாளர் வரதராஜன், உதவியாளர் அன்பழகன், சுகாதார ஆய்வாளர் ஜோதி, தீக்கதிர் செய்தி யாளர் சரவணன், தமிழ் நியூஸ் செய்தியா ளர் கார்த்திகேயன் மற்றும் களப்பணியா ளர்கள் ரவீந்திரன், ஐயப்பன், பொக்லைன் ஓட்டுநர் விக்னேஷ் உள்ளிட்ட அனைவருக் கும் பயனாடை மற்றும் இனிப்பு வழங்கி கௌர விக்கப்பட்டது.

;