மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு வடக்குக் கிளை மூத்த தோழர் எஸ். எஸ்.முருகையன் (65) உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், என்.சுரேஷ்குமார், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, சிவபுண்ணியம், தி.மோகன்தாஸ், அரங்கசாமி, அ.வெங்கடேசன் உள்ளிட்டோர் அன்னாரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.