தஞ்சாவூர், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஒன்றியக் குழு உறுப்பினர் சித்திர வேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பெர்சியா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் நதியா, சித்திரவேல், காந்தி, ராஜலிங்கம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், “உசிலம்பட்டி பகுதியில் மூடிய பள்ளியை திறப்பது குறித்து மார்ச் 15-ஆம் தேதிக்குள் முடி வெடுத்து அறிவிக்கப்படும். துருசுப்பட்டி செல்லும் கட்டளைக் கால்வாயில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங் கும். நியாய விலைக் கடை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்படும். நகர்ப் பேருந்து கிள்ளுக்கோட்டை வரை இயக்கப்படும். உசிலம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைத்து தரப்படும். உசிலம்பட்டி துரு சுப்பட்டி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் அனைத்துப் பேருந்துகளும் வளம்பக்குடி நிறுத்தத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரி வித்தனர். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.