districts

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விதை விற்பனை உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

தஞ்சாவூர், மார்ச் 22-  தஞ்சாவூர் மாவட்டத்தில் விதை விற்பனை உரிமங்கள் வைத்துள்ள விதை விற்பனையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய விதை விற்பனை உரிமத்தை புதுப்பித்து கொள்ள தஞ்சா வூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்கு நர் முனைவர் விநாயகமூர்த்தி  தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டுக்கோட்டை, தஞ்சா வூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் நெல், உளுந்து, நிலக் கடலை, தென்னங்கன்றுகள், காய்கறி  நாற்றுகள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் இவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்பவர்கள், கட்டாயம் விதை சட்ட விதிகளின்படி, விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை மேற்கொள்ள வேண்டும்.  இதுவரை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலை யங்கள் மூலமாக விண்ணப்பித்த 590 விற்ப னையாளர்கள் அனைவருக்கும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ன் கீழ் 5 ஆண்டுகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. தங்களின் விதை விற்பனை உரிமத்தை உரிமம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 5 ஆண்டுகள் முடியும் தேதியான காலக்கெடுவுக்குள் புதுப்பிப்பு தொகை யாக ரூ.500 மட்டும்  செலுத்தி, தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதை விற்பனை உரிமத்தினை புதுப்பித்து, விதை சட்ட விதிகளை பின்பற்றி தரமான விதை விநி யோகம் மேற்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.