தஞ்சாவூர், ஏப்.2- நடப்பு கோடை மற்றும் முன்பட்ட குறுவை பருவத்துக்கு ஏற்ற, குறுகிய கால ஏடிடீ 53 நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,” தஞ்சாவூர் மாவட் டத்தில் நடப்பு கோடை பருவத்தில் சுமார் 40,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய விவ சாயிகள் தற்போது நாற்றங்கால் தயா ரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கோடைப் பருவங்களில் ஏ.டி.டீ 36, ஏ.டி.டீ. 37, ஏ.எஸ்.டி. 16, ஏ.டி.டீ. 43, ஏ.டி.டீ. (ஆர்) 45, கோ 51, டிபிஎஸ் 5 போன்ற நெல் ரகங்கள் பயிர் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிக மகசூல் தரக்கூடிய குறுகிய கால நெல் ரகங்கள் விவசாயிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது. ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் கடந்த 2019-ஆம் ஆண்டு குறுவை மற்றும் கோடை பருவங்களுக்கு ஏற்ற குறுகிய கால ஏ.டி.டீ.53 நெல் ரகத்தை வெளியிட்டது. குறுவை சாகுபடிக்கு ஏற்ற ரகமான இந்த ஏ.டி.டீ 53 நெல்ரகம் 110-115 நாட்கள் வயதுடையது. ஏ.டி.டீ 53 குறுகிய கால நெல் ரகம், ஏ.டி.டீ 43 மற்றும் ஜே.ஜி.எல் 384 ஆகிய ரகங்களை பெற்றோர்களாகக் கொண்டு, கலப்பிலிருந்து வம்சாவளி தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. ஏ.டி.டீ53 ரகம் குறுகிய கால உயர் விளைச்சல் கொண்ட சன்ன ரகம் ஆகும். இந்த ரகம் கச்சிதமான செடி அமைப்பும். அடர்ந்த கதிர்களுடனும் தண்டுத்துளைப் பான், இலைமடக்குப் புழுவிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. ஹெக்டேருக்கு 6,334 கிலோ சராசரி மகசூல் தரவல்லது. இது ஏ.டி.டீ 43-க் காட்டி லும் 9.4 விழுக்காடும் கோ 51 ஐ விட 14 விழுக்காடும் அதிக மகசூல் கொடுக்கக் கூடியது. அதிக மகசூல் திறனும், பூச்சி மற்றும் நோய்த் தாக்கும் திறனும், சாயாத் தன்மையும் சிறந்த சமையல் பண்புகளை யும் கொண்டுள்ளதால் ஏ.டி.டீ. 53 நடப்பு பருவங்களில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஏற்றது. நடப்பு கோடை மற்றும் முன்பட்ட குறு வைப் பருவத்தில் நெல் சாகுபடி மேற் கொள்ளும் விவசாயிகள், இப்பரு வத்துக்கு ஏற்ற குறுகிய கால ரகமான ஏ.டி.டீ 53 நெல் ரகம் கொண்டு நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிட லாம்” எனத் தெரிவித்துள்ளார்.