districts

img

பாபநாசம் அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார். கண்காட்சியை பள்ளி தலைமைச் செயலர் திருஞானசம்பந்தம், நிர்வாக செயலர் வரதராஜன், பள்ளிச் செயலர் செல்வராசு, பள்ளி தலைமையாசிரியர் தீபக் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மாணவர்கள் தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில், தங்களது படைப்புகளான நவீன குப்பைத் தொட்டி, மீன் கழிவுகளை உரமாக்குவது, பேக்டரி புகையை பில்டர் செய்வது, செங்கற்களை இயந்திரம் மூலம் தயாரிப்பது உட்பட 200-க்கும் மேற்பட்டவற்றை காட்சிப்படுத்தினர்.