districts

தஞ்சையில் நாளை பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.21 - தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு, ஏப்.23 (சனிக்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது என முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த மார்ச் 20 அன்று அனைத்து பள்ளிகளிலும், அரசு பள்ளி மாண வர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண் மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில்  86,000 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப் படுத்தும் வகையில், சிறப்பு ஒலி, ஒளி வாகனம்  மூலம் 15 ஒன்றியங்களிலும் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. மேலும், 23 கலைக்குழுக் கள் மூலம் நாடகம், இசை நிகழ்ச்சி மூலம்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத் தவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வும், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப் பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கள் புதிதாக தெரிவு செய்யப்பட உள்ளனர்.  முதற்கட்டமாக சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக  முதல்வர் ஏப்.19 அன்று பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்.23 அன்று, அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் முதற்கட்டமாக பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப் படுகிறது. எனவே அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மேலா ண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.