தஞ்சாவூர், ஜூலை 8 - தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் ஜூலை 9 (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 224 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நான்காம் கட்டமாக நடை பெற உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் சிவக்குமார் தெரிவித்துள் ளார். மேலும், கடந்த மார்ச் 20 அன்று அனைத்து பள்ளிகளி லும், அரசுப் பள்ளி மாணவர் களின் பெற்றோர்களுக்கு, பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 86 ஆயிரம் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் வகையில், சிறப்பு ஒலி, ஒளி வாகனம் மூலம், 15 ஒன்றியங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட் டது. மேலும், 23 கலைக்குழுக் கள் மூலம் நாடகம், இசை நிகழ்ச்சி மூலம் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதி கப்படுத்த, பள்ளி மேலாண் மைக் குழு மறுகட்டமைப்பில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட உள்ள னர். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில், ஜூலை 9 (சனிக்கிழமை) 224 அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும் நான் காம் கட்டமாக பள்ளி மேலாண் மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி மாண வர்களின் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.