தஞ்சை அருகே 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சேலை வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை தஞ்சை வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (63) சேலை வியாபாரி. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சேலைகள் விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் சேலை விற்பனை செய்யும் பொழுது, தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். இதன் பேரில் ஆய்வாளர் கலைவாணி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சேலை வியாபாரி ராஜாவை கைது செய்தார்.