districts

img

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இரண்டாவது நாள் போராட்டம்

தஞ்சாவூர், ஏப்.12-  தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பருத்திக்குடியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி  கூரை, கான்கிரீட் பெயர்ந் தது. இதில், மூன்றாம் வகுப்பு மாணவர் காயம டைந்தார். இதனால், திரு விடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்  தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பிரச்சனையை சுமூகமாக முடித்து தருவ தாக, கூடுதல் ஆட்சியர் உறுதியளித்தார்.  இது தொடர்பாக ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரிடம், பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என ஊரக வளர்ச்சி துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், புதன் கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என மாவட்ட  நிர்வாகம் கூறிய நிலையில்,  எவ்வித பேச்சுவார்த் தைக்கும் ஊழியர்கள் அழைக்கப்படாததால், இரண்டாவது நாளாக, ஆட்சி யர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட் டம் தொடரும் என அறிவித் துள்ளனர்.

;