தஞ்சாவூர், மார்ச் 23 - தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பி லான 2,400 சதுரஅடி பரப்பளவில் கட்டப் பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப் பட்டு அந்த இடத்தை மாநகராட்சி அதி காரிகள் மீட்டனர். தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதி யில் அகழிக்கரையில் பல ஆண்டு களுக்கு முன்பு முத்து வைத்திய சாலை என்ற தனியார் மருத்துவமனை செயல் பட்டு வந்தது. பின்னர் மருத்துவமனை இருந்த இடத்தை பாலகிருஷ்ணன் என்பவர் தனது மளிகை கடைக்கான பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். இதற்கிடையில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தென்கீழ் அலங்கம் சாலையை விரிவுபடுத்திட இடையூ றாக இருந்த இந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதை எதிர்த்து பாலகிருஷ்ணனின் மகன்கள் தஞ்சாவூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சாலை விரிவாக்கம் செய்ய இடையூ றாக இருந்த 2,400 சதுரஅடி பரப்பள விலான ரூ.5 கோடி மதிப்பிலான இந்த கட்டிடம், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மாநகராட்சி ஆணையர் க.சர வணக்குமார் மேற்பார்வையில், நகர மைப்பு அலுவலர் ராஜசேகர் முன்னிலை யில் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அதே போல் தென்கீழ் அலங்கம் பகுதி யில் ஏற்கெனவே உள்ள கழிவுநீர் சாக்க டையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டி டங்கள் அனைத்தையும் இடித்து அகற்றும் விதமாக, அந்த ஆக்கிரமிப் பில் உள்ள கட்டிடங்களில் தற்போது வசிப்பவர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது.