districts

வேளாண் துணை  இயக்குநர் ஆய்வு

பாபநாசம்,  ஜூன் 22 - தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாப நாசத்தை அடுத்த பண் டாரவாடை, பசுபதி கோவில் ஆகிய பஞ்சாயத் துகளில் ஆய்வு மேற் கொண்டார். பாபநாசம் வட்டாரத் தில் பசுபதிகோவில், பண் டாரவாடை, பெருமாள் கோவில், திருவைகாவூர், சோமேஸ்வரபுரம், கூனஞ் சேரி ஆகிய ஆறு பஞ்சா யத்துகளில் 2021-22 ஆம்  ஆண்டுக்கான கலைஞர்  திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இக்கலைஞர் திட்டத்தின்கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று எண்கள் வீதம்  இலவசமாக வழங்கப் பட்ட தென்னங்கன்று களை நடவு செய்துள்ள விவசாயிகளை சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் 16 லிட்டர் கைத் தெளிப்பான், 16 லிட்டர் பேட்டரி தெளிப்பான் ஆகியவற்றை 50 சதவீத மானியத்தில் பெற்ற விவ சாயிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.