தஞ்சாவூர், டிச.19- தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பேராவூரணி பகுதியில் 100 குளங்களை மீட்டு, சீரமைத்த விவசாயிகளை உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி கள் நேரில் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், ஞாயி றன்று கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயி கள் சங்கம் (கைஃபா) சார் பில், கரிகாலச் சோழ மன்ன ரின் நீர் மேலாண்மை செயலை போற்றும் விழா, கைஃபா வின் 100 ஆவது குளம் சீர மைப்பு பணி நிறைவு விழா, குறுங்காடு துவக்க விழா, சமூக செயற்பாட்டாளர் களுக்கு விருது வழங்கும் விழா, குளம் சீரமைப்பு பணிக்கு பொருளுதவி வழங்கிய தொழிலதிபருக்கு அஞ்சல் தலை வெளியீட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர் களை கைஃபா செயலாளர் கோ.பிரபாகரன் வரவேற் றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு வள்ளுவன், முன்னாள் கட லூர் மாவட்ட ஆட்சியர் வி. அன்புச்செல்வன், நீர்வள ஆதாரத் துறையின் காவிரி கீழ் வடிநிலை கோட்ட கண் காணிப்பு பொறியாளர் அ. முருகேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வாழ்த் துரை வழங்கி பேசினார். சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி இரா.சுரேஷ்குமார், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான வி.பாரதிதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கைஃபா அமைப்பு நிர்வாகிகளுக்கு நீதிபதிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித் தனர். தொடர்ந்து கைஃபா அமைப்புக்கு சுமார் 50 லட் சம் ரூபாய் செலவில் பொரு ளுதவி வழங்கிய ஈரோடு தொழிலதிபர் டி.சதிஷ்குமா ருக்கு, கைஃபா சார்பில் அஞ்சல் தலை வெளியிடப் பட்டு, அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்ன தாக ஆவணத்தில் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுகுளத் தில் 7 இடங்களில் குறுங்காடு அமைக்கும் பணியை நீதிபதி கள் தொடங்கி வைத்தனர்.