districts

பொதுமக்கள் குறையை தீர்க்க புதிய செயலி: தஞ்சை மேயர் தகவல்

தஞ்சாவூர், மார்ச் 11 -  தஞ்சையை சேர்ந்த பொதுமக்கள் தங்கள்  குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி  உருவாக்கப்படும். அதன் மூலம் தங்கள் குறை களை பதிவு செய்யலாம். இதேபோல் கட்டண மில்லா தொலைபேசி எண் மூலமும் தங்களது  குறைகளை மக்கள் பதிவு செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தஞ்சா வூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரி வித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவ டைந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தஞ்சை மீன் மார்க்கெட் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்த னர். ஆய்வுக்கு பின்னர் மேயர் சண்.ராமநா தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தினமும் இரண்டு வார்டுகள் வீதம் நேரடி யாக சென்று பொதுமக்களிடம் அவர்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கான  நிதி பெற்று, தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாநக ராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிக  மோசமாக உள்ளன. அரசின் நிதி பெற்று சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக தஞ்சை கீழவா சல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் முறை யாக செயல்படாமல் உள்ளது. கட்டிடங்கள்  அனைத்தும் பயன்படுத்தாமல் பழுதடைந் துள்ளன. இதற்கு பதிலாக புதிய மீன் மார்க்கெட் கட்டித் தரப்படும்.  தஞ்சை மாநகராட்சியில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்ப தற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு  செய்யலாம். இதேபோல் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் தங்களது குறை களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தஞ்சை மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராத  வகையில் கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது”.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.