தஞ்சாவூர், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் மரக்காவலசை ஊராட்சி, கழுமங்குடா (ஐஸ்வாடி) பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், மின் இணைப்பு இல்லாமல் கடந்த பல வருடங்களாக குடி யிருந்து வருகின்றனர். இங்கு குடியிருந்து வருப வர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக, அரசின் பல் வேறு துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின் இணைப்பு இல்லாததால் இப்பகுதியில் இரவு நேரங்க ளில் பாம்புகள் உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் தொல்லை உள்ளதால் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில், சேது பாவாசத்திரம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், இப்பகுதி பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டு மார்ச் 11 (வெள்ளிக்கிழமை) அன்று கழுமங்குடா கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.