தஞ்சாவூர், ஜூலை 20 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே நடைபெற்று வரும் பாலப் பணியை மழைக்காலம் முடிந்த பின்னரே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். கந்தர்வகோட்டை பகுதியில் தொடங்கி கறம்பக்குடி, வாட்டாத்திக் கோட்டை, கொண்டிக்குளம் வழியாக செல்லும் மகாராஜசமுத்திரம் காட்டாறு, ராஜாமடம் அருகே கடலில் சென்று கலக்கிறது. இந்நிலையில், பட்டுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் சாலையில், பண்ண வயல் அருகே காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இந்த பாலத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக பாலத்தின் அருகே போக்குவரத்துக்காக, மண்ணாலான தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி முடிந்ததும், பாலம் இடிக்கப்படும் என தெரிகிறது. எப்படியும் பாலப்பணிகள் முடிய ஓராண் டுக்கும் மேல் ஆகலாம் என கூறப்படு கிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி யுள்ள நிலையில் பாலப் பணியை தொடங்கினால், வெள்ள நீரால் தற்கா லிக தரைப்பாலம் அடித்து செல்லப் படும் அபாயம் உள்ளது. மேலும், புதிய பாலத்திற்கான கட்டுமானங்களுக்கும் சேதம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டு பாலம் துண்டிக்கப்பட்டால், 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பட்டுக்கோட் டைக்கு வருவது பாதிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்படும். எனவே மழைக்காலம் முடிந்த பிறகு, பாலப்பணியை தொடங்கி னால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பொன்னவராயன்கோட்டை வீரசேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.