தஞ்சாவூர், மார்ச் 7 - பேராவூரணி அருகே அரசு உயர்நிலைப் பள்ளி க்கு சுற்றுச்சுவர் அமைத் துத் தருமாறு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், அதம்பை வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர் அறம் நிறு வனர் தலைவர் சி.இராம சாமி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமாரை ஞாயிறன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், “தஞ்சா வூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட அதம்பை அரசு உயர்நி லைப் பள்ளியில் நூற்றுக்க ணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற னர். இப்பள்ளிக்கு சுற்றுச்சு வர் இல்லாததால் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங் குகள் பள்ளிக்குள் புகுந்து விடுகின்றன. இது மாண வர்கள் கற்றல் திறனை பாதிக் கும் வகையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் பள்ளிக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, தங்களின் சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதம்பை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.