districts

img

சோளகம்பட்டி வாரி உடைப்பை சரி செய்து, தூர்வாரித் தருவதாக அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், ஏப்.12-  தஞ்சாவூர் மாவட்டம் உய்யக் கொண்  டான் நீட்டிப்பு வாய்க்கால் புதிய கட்டளை  மேட்டு வாய்க்கால்களை தூர்வார வேண்  டும். உயர்மட்ட கட்டளை கால்வாய் வாய்க்கால்கள் உடைந்து கிடப்பதை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புத னன்று புதுக்குடியில், தஞ்சாவூர்- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் உய்யக்கொண் டான் நீட்டிப்பு வாய்க்கால், கட்டளை மேட்டு  வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், பூதலூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலை மையில் அமைதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உய்யக்கொண்டான் நீட்டிப்பு  வாய்க்கால் தலைப்பு மதகு அருகில், சோள கம்பட்டி வாரி சைபனில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக ஆய்வு செய்து  பணி துவங்கப்படும். புதிய கட்டளை மேட்டு  வாய்க்கால், செல்லப்பன் பேட்டை பெத்த  மாதுரான் ஏரி மற்றும் உடைந்து கிடக்கும்  அனைத்து மதகுகளையும், ஜூன் மாதத்  திற்கு தூர்வாரி சரி செய்து தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. நவலூர் கிறிஸ்தவ தெருவிற்கு பாலம் அமைப்பது தொடர்பாக  உரிய மேல் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை  மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.