districts

ஊதா நிறத்தில் விளையும் அபூர்வ சின்னார் நெற்பயிர் வியந்து பார்க்கும் மக்கள்

தஞ்சாவூர், பிப்.11 - தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி  பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின் ஒரு  பகுதியாக முன்னோடி விவசாயிகளை அணுகி பயிற்சி பெறுவர்.  அவ்வாறு, பயிற்சியின் போது, மாளியக் காடு கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்னும் விவசாயியின் வயலில் ஊதா நிறத்தில் நெற்பயிர்கள் வளர்ந்திருப்பதை கண்டு மாணவர்கள் வியந்தனர். வழக்கமாக பச்சை நிறத்தில் நெற்பயிர்களைப் பார்த்து பழக்கப்பட்ட மாணவர்களின் கண்களுக்கு ஊதா நிறத்தில் விளையும் நெற்பயிர்களை காணும் போது வித்தியாசமாகத் தான் இருந்தது.  பட்டுக்கோட்டை அருகே மாளியக்காடு என்னும் கிராமத்தில் ஊதா நிறத்தில் விளை யும் பாரம்பரிய சின்னார் ரக நெற்பயிரை விவசாயி மகேந்திரன் விளைவித்து வரு கிறார். அவரது நிலத்தில் பயிரிட்டுள்ள நெற் பயிரைப் பார்த்தால் பலரும் வியக்கின்றனர். வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் நெற்பயிற்கள் இவர் நிலத்தில் ஊதா நிறத்தில் உள்ளன.  இதுபற்றி விவசாயி மகேந்திரன் கூறுகை யில், “தமிழகப் பகுதியிலிருந்து ஊதா ரக நெற்பயிர் விளைவதைப் பார்த்தேன். அதை அங்கிருந்து வாங்கி வந்து பயிரிடுகிறேன். மூலிகை சக்தி கொண்ட இந்த நெற்பயிர் பெயர் சின்னார். 135 நாட்கள் வயது கொண்ட இப்பயிரை முழுக்க முழுக்க இயற்கை உரம் போட்டு விவசாயம் செய்துள்ளேன்.

அதிக  காற்று வீசினாலும் பயிர் சாய்வது இல்லை. ஒரு  ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக் கிறது.  விளையும் நெற்பயிர் வளரும்போது கத்தரி ஊதா நிறத்திலும், அறுவடையின் போது ரோஜா நிறத்திலும் இருக்கும். ஒரு கதிரில் 100 நெல் மணி வரை இருக்கும். ஏக்க ருக்கு 40 மூட்டைகளுக்கு மேல் நிச்சயம் கிடைக்கும். நெல்மணிகளை கைக்குத்தல் மூலம்  அரிசி எடுத்து அதை உணவாகச் சாப்பிட்டு வரு கிறோம்.  ஏனெனில் நெல்லை அரவை மில்லில் கொ டுத்து அரைத்து அதன் மூலம் முழுவதுமாக பட்டை தீட்டினால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகிவிடும். அதேநேரத்தில், ரசாயன உரத்தால் பல்வேறு உடல் உபாதை கள் ஏற்படுவதால் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கிறேன்” என்றார். அப்பகுதியில் விளையும் ஊதா நிற நெற்பயிரைக் கண்டு  அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ள னர்.  அதுமட்டுமின்றி மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுணி போன்ற பல்வேறு பாரம்ப ரிய நெற்பயிர்களையும் அவர் பயிரிட்டு வரு கிறார். மேலும் பாரம்பரிய நெற்பயிர்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்.