தஞ்சாவூர், அக்.26 - பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே அய்யாச்சாமிபட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டக் குழு உறுப்பி னர் அசோக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசு, ஆவின் நிர்வாகம் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டுத் தீவனங் களை மானிய விலையில் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பசு மாடு, கன்றுக் குட்டியுடன் முழக்கமிட்டனர். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றியத் தலைவர் செளந்தர ராஜன் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.