தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை நீலாதேவி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, 227 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.