districts

தனியார் பேருந்து மோதி விபத்து  அரசுப் பள்ளி ஆசிரியர் பலி

தஞ்சாவூர், ஏப்.22 - தனியார் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரி யர் சம்பவ இடத்திலேயே பலி யானார். மதுரை மாவட்டம் தத்த னேரி அருகே களத்துப் பொட்டல் கிராமத்தை சேர்ந்த வர் சிவன்ராஜ்(31). இவர்  காரைக்குடி அருகே தீர்த்த லைக்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வந்தார். இவர் தஞ்சா வூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே ஆலத் தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய நிலை யில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி மாறுதலாகி சென்றார். இந்நிலையில், வியாழக் கிழமை ஆலத்தூர் பள்ளி யில் தனது பணி மாறுதலுக் கான கடிதத்தை வாங்குவ தற்காக, சிவன்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில், காரைக்குடியில் இருந்து  வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே பெருமாள்கோவில், மகாராஜசமுத்திரம் காட்டாற்று பாலம் அருகே  வரும் போது, பட்டுக்கோட் டையில் இருந்து புதுக் கோட்டை நோக்கி அதிக வேகமாக சென்ற தனியார் பேருந்து சிவன்ராஜ் மீது  மோதியது. இதில் நிலைதடு மாறி சிவன்ராஜ் கீழே விழுந்த நிலையில், பேருந் தின் பின்புற சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை காவல்துறையினர், சிவன் ராஜ் உடலை கைப்பற்றி, விபத்தை ஏற்படுத்திய தனி யார் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம் சாத்தம்பட்டி வடகாடு பகு தியை சேர்ந்த பாலகிருஷ் ணனை (36) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.