தஞ்சாவூர், பிப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 5 ஆவது வார்டில், திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரிவாள்-சுத்தி யல்-நட்சத்திரம் சின்னத்தில் வ.ரவி போட்டியிடுகிறார். இவர் வார்டுக்குட்பட்ட நேதாஜி காலனி, உக்கடை சாலை, ஏ.எம்.ஆர் காலனி, மன்னன்பிள்ளைத் தெரு, அருணாசலேஸ்வரர் தெரு, வெள்ளாளன் செட்டித் தெரு உள்ளிட்ட இடங்களில் சிபிஎம், திமுக மற்றும் கூட்ட ணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறு கையில், “அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை, பொதுமக்கள் பயன் பெறும் வகையில், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நட வடிக்கை எடுக்கப்பேன். ஏ.எம்.ஆர் காலனி பகுதியில் குண்டுங்குழியுமான சாலை தார்ச் சாலையாக அமைத்து தரப்படும். மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததால், தண்ணீர் தேங்கி நின்று தெருக்களில் கழிவு நீராக மாறிவிட்டது. கழிவுநீரை அகற்றி, வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பேன். கொசுத் தொல் லையை கட்டுப்படுத்த வாரந் தோறும் கொசு மருந்து தெளிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார். அவருடன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ஏ.நம்பிரா ஜன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சரவ ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
செயல்வீரர் கூட்டம்
முன்னதாக கட்சி நிர்வா கிகள், செயல் வீரர்கள் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.