districts

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வுக்காக வழங்கிய சான்றிதழ் போலி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கடிதம்

தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் தமிழ் பல் கலைக்கழகத்தில் பணிபுரி யும் 8 பேருக்கு பதவி உயர்வுக்காக வழங்கிய சான்றிதழ் போலி என கூறி, தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரியம், சான்றிதழை ரத்து செய்து, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.   தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் பணி புரியும் கிருஷ்ணமூர்த்தி, சரவணன், சக்தி சரவணன், சண்முகவடிவு, நிர்மலா, அன்பரசன், வெங்கடேசன், செல்வராஜ் ஆகியோர் பதவி உயர்வுக்காக, கடந்த 2010 முதல் 2016 ஆம் ஆண்டு,  திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியில் தட்டச்சர் பயிற்சி எடுத்ததாக, போலி சான்றிதழ் கொடுத்துள்ள தாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் தேர்வு வாரி யத் தலைவர், சம்பந்தப் பட்ட 8 பேருக்கும் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டி ருந்தார். அவர்களிடம் இருந்து உரிய பதில் வராத நிலையில், மீண்டும், புத னன்று கடிதம் அனுப்பி உள்ள னர்.   இதில், தட்டச்சு தேர்வு க்கு, குறைந்த பட்சம் மூன்று  மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விடுப்பு எடுக்கா மல், எப்படி நேரடியாக தேர்வு  எழுத முடியும். முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ள தாக கருதி, சான்றிதழை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டது. 15 நாட்களில் விளக்கம் அளிக்காத நிலையில், சான்றி தழை ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தட்டச்சு பயிற்சிக்காக பணியாளர்கள் விடுப்பு எடுத்தனரா? என பல்கலைக்கழகத்திடமும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.  இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல் நிலைப் பணியாளர்கள் சங்க தலைவர் சக்தி சரவணன் கூறியதாவது: தேர்வு வாரியத்திடம் புகார் மனுவை கேட்டு, கடந்த மார்ச் 1-ஆம் தேதி மனு அளித்தோம். தேர்வு  வாரியம் உரிய பதில் அளிக்க வில்லை. தற்போது, சான்றி தழை ரத்து செய்வதாக கூறி கடிதம் அனுப்பியுள்ளது. சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக, தேர்வு வாரியம் மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டும். உரிய விளக்கம் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்’’ இவ்வாறு அவர் தெரி வித்தார்.