districts

மரக்கன்றுகள் நடல்

தஞ்சாவூர், மார்ச் 22 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, தஞ்சை மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் க.ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் வேம்பு, மா, பலா, வாகை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்று களை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அப்போது,  மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் ரெங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.