districts

img

பெருமகளூர் பேரூராட்சி வார்டு திமுக வேட்பாளர் திலகம் அறிவுமணி போட்டியின்றி தேர்வு

தஞ்சாவூர், பிப்.7 - நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சி 5  ஆவது வார்டில் தி.மு.க  வேட்பாளராகப் போட்டியி டும் திலகம் அறிவுமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இவரை எதிர்த்து எவரும்  வேட்புமனு தாக்கல் செய்யாததால், திலகம் அறிவுமணி வெற்றி பெற்றார். இதையடுத்து, திலகம் அறிவுமணி பேரா வூரணி எம்எல்ஏ என்.அசோக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற் றார். அவருக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது திமுக பேரா வூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை. ரவிச்சந்திரன், திமுக முன் னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வ ராஜ், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், தலைமைக் கழகப் பேச்சாளர் அ.அப்துல் மஜீது, விளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், முன்னாள் ஒன்றி யக்குழு உறுப்பினர் சண்முகம், திமுக நிர்வாகி கோ.சி.அறிவுமணி, பால முருகன் மற்றும் பலர் உடனி ருந்தனர்.