தஞ்சாவூர், ஏப்.11 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை பௌர்ணமி திருவிழா கடந்த ஏப்.7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப். 15 ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை தேருக்கு மாலை அணிவித்து சந்தனம் இட்டு, தீபஆராதனை காட்டி முகூர்த்தம் செய்யப் பட்டது. இந்நிகழ்வில், பரம்பரை அறங்கா வலர் தலைவர் கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோவில் நிர்வாக அலுவலர் சிதம்பரம், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகைய றாக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.