districts

img

பேராவூரணி பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டியில் சாதனை

தஞ்சாவூர், ஏப்.19- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள், தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். பேராவூரணி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொன் றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு பதக்கங்க ளை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.  3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுகன்யா, 800 மீட்டரில் மாயா, 400 மீட்டரில் நிஷா, வட்டு எறிதலில் ஆதித்யா, நீளம் தாண்டுதலில் ருத்ரன், வைசிகா, குண்டு எறிதலில் ஹர்சித் ஆகியோர் தங்கப்பதக்க மும், வட்டு எறிதலில் கீர்த்தனா, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் துரைக்கண்ணன், 200 மீட்டர் ஓட்டப் பந்த ய4த்தில் யஷ்வந்தன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், நீளம் தாண்டுதலில் கிரிதரன், வட்டு எறிதலில் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றுள் ளனர். சாதனை புரிந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன், தலைமை பயிற்சி உடல்கல்வி ஆசிரியர்  சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் லெட்சும ணன், விக்னேஷ், நடேசகுகன், சுகன்யா, முரளி, கார்த்திக் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.