கும்பகோணம், நவ.10- கும்பகோணத்தில் தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உடல் தான விழிப்புணர்வு கருத்தரங்கில், 6 தம்பதிகள் உட்பட 13 பேர் தஞ்சை மருத் துவ கல்லூரி மெய்யியல் துறைத்தலைவரிடம் உடல் தான விருப்ப மனுவை வழங் கினர். கும்பகோணத்தில் தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உடல் தான விழிப்புணர்வு கருத்தரங்கம் கும்பகோ ணம் கோவிந்தன் மஹாலில் வட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற் றது. கருத்தரங்கில் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட் டச் செயலாளர் தமிழ்மணி, மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி, வட்டச் செய லாளர் பக்கிரிசாமி, மாநி லச் செயற்குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் நிர்வாகி கள் பொறுப்பாளர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஓய்வூதி யர் சங்க உறுப்பினர்கள் மாநில செயற்குழு உறுப்பி னர் ராஜகோபாலன் தலை மையில் 6 தம்பதிகள் உட்பட 13 பேர் உடல் தானம் செய்வ தற்கு உறுதிமொழி பத்தி ரத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி மெய்யியல் துறைத் தலைவர் சிவகாமிடம் வழங் கினர். இதில், மருத்துவர் அருட்செல்வன், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்து வர் செந்தமிழ்ச்செல்வன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறைத்தலை வர் சிவகாமி உறுதிமொழி பத்திரங்களை பெற்றுக் கொண்டு சிறப்புரையற்றினார்.