districts

img

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சையுடன் இணைத்ததை ரத்து செய்க! மாணவர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.15 -  பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை, தஞ்சையுடன் இணைத்ததை ரத்து செய்து, மீண்டும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தனித்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய  மாணவர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை தலைமை தபால் நிலையம் அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றி யத் தலைவர் சு.சுந்தரபாண்டியன், மாணவர் சங்க ஒன்றியத் தலைவர் செ.பிரேம்குமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டா ரத் தலைவர் ச.அண்ணாமலை ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய மாணவர் சங்க  மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி, வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் க.அருளரசன், மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா,  மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வே. அர்ஜூன், மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டத் தலை வர் மு.இராமச்சந்திரன் ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.  வாலிபர் சங்கத்தின் ஒரத்தநாடு ஒன்றியச்  செயலாளர் செ.பெர்னாட்ஷா, ஆசிரியர் அமைப்பு பி.சகாய சார்லஸ், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மாவட்டத் தலைவர் மா.மணிமாறன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

;