தஞ்சாவூர், ஏப்.6 - மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்கக் கோரி, தஞ்சாவூர் பொதுப் பணித் துறை நீர் வள ஆதாரத் துறையின், சுரங்கவியல் மற்றும் கண்கா ணிப்புக் கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் சங்கம் சார்பில், புதன்கிழமை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவையில், நீர் வளத் துறை மானியக் கோரிக்கையில் போது, மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறப்பது குறித்த அறிவிப்பை வெளி யிட வேண்டும். காலங்காலமாக ஆற்றில் இறங்கி மணல் அள்ளும் நடை முறையை மாற்ற வேண்டாம். மாட்டு வண்டியில் மணல் அள்ள பர்மிட் ரூ. 224-ஐ விட கூடுதல் தொகையை வசூ லிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த சிஐடியு மாவட்டச் செயலர் சி.ஜெயபால் கூறுகையில், மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை தமிழக அரசு அறிவித்தபடி திறப்பதற்கான நடவ டிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே மாட்டு வண்டிக்கென தனியாக மணல் குவாரி திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியி டப்பட்டு 6 மாதங்களாகியும் இன்னும் மணல் குவாரி திறக்கப்படவில்லை.
இந்தக் கால நீட்டிப்பு செய்வதற்கு காரணம் என்ன? இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைத் தமிழக அரசுத் தெளிவுபடுத்த வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்கிற வகையில், மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். லாரி, டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் நிகழ்கிற மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். லாரிக்கான மணல் குவாரியை அனுமதிக்கக் கூடாது” என்றார். இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மணிமாறன், மாட்டுவண்டி சங்க மாவட்ட நிர்வாகி கள் கோவிந்தராஜ், நாகராஜ், மூர்த்தி, சங்கையன், லட்சுமணன் உள்ளிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் பொதுப்பணித் துறை அலுவலகம் நொய்யல் இல்லம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட செயலாளர் வி.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்ட செயலாளர் சி.முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் பிர காஷ், குமார், பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.