districts

img

மதுக்கூர் பேரூராட்சிக்கும் நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும் மாதர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 19-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய  மாநாடு சிவக்கொல்லை ஏ.கே.எஸ் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் எல்.சின்னபொண்ணு தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செய லாளர் எம்.கீதா வரவேற்றார். மாவட்டப் பொரு ளாளர் இ.வசந்தி துவக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சி.கலாவதி வேலை அறிக்கை வாசித்தார்.  மாநாட்டில், ஒன்றியத் தலைவராக சி.கலா வதி, ஒன்றியச் செயலாளராக அ.ஜெயந்தி, பொருளாளராக கோ.லீலாவதி உள்ளிட்ட 11  பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி புதிய நிர்வாகிகளை வாழ்த்தி,  மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். நூறு நாள்  வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மதுக்கூர் பேரூ ராட்சிக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.