கும்பகோணம், ஜூன் 26 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கும்பகோணம் மாநகர மாநாடு கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநகர தலைவர் எஸ்.சுமதி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் எம்.அறிவுராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் பெண்கள் மீதான வன்முறையை தடுத்திட வேண்டும். ரேசன் கடையை மூடக்கூடாது. சமையல் எரிவாயு பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை-எளிய குடும்பங்களின் வறுமையைப் போக்க மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகரத் தலைவராக ஏ.எஸ்.சுமதி, செயலாளராக கே.எஸ்.சுமதி, பொருளாளராக பி.தனலெட்சுமி உட்பட 11 பேர் கொண்ட மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது.