districts

img

நம்ம பள்ளித் திட்டத்துக்கு முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் : அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், டிச.22-  நம்ம பள்ளித் திட்டத் துக்கு முதல் நாளில் ரூ.50 கோடி  வசூலானது என பள்ளிக்  கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத்  துறை சார்பில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா வில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்த தாவது: “தஞ்சாவூர் மாவட்டத் தில் கடந்த ஆண்டை போல நிகழாண்டும் சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடத்தப்படு கிறது. இத்திட்டத்தின் மூலம் நிகழாண்டு 2,950 பயனாளி கள் பயன்பெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த  அரங்கத்தில் 400 கர்ப்பிணி  பெண்களுக்கு நலத்திட்டங் கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இடை நின்ற மாணவர்கள் 1.80  லட்சம் பேர் எனக் கண்டறி யப்பட்டுள்ளனர். அவர் களை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம். கொரோனா காலம் என்பதால் இடை நிற்றல் அதிகமானது. இனி மேல் இடைநிற்றல் படிப்படி யாக குறைந்துவிடும். பள்ளி யில் படிக்கும் மாணவர் களில் யார் இடை நிற்றலுக்கு  ஆளாவர் என்பதைக் கஷ் டறியவுள்ளோம்.

நம்ம ஊர் பள்ளித் திட் டத்துக்குத் தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் வழங்கினார்.  தொடக்க நாளிலேயே ரூ. 50  கோடி வசூலானது. நன்  கொடையாளர்கள் வழங் கும் பணம் சரியான வழியில், சரியானபடி செல்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு எப்போது ஏற்படுகிறதோ, அப்போது இன்னும் அதிக மாக வழங்குவர். அதற்கு வெளிப்படைத் தன்மை தேவை என்பதை உணர்ந்  தோம். எனவே, நடைமுறை யில் இருக்கிற சாதக, பாத கத்தைப் பார்த்து நல்ல திட் டத்தை உருவாக்கித் தந் துள்ளோம். பள்ளியில் ஏற்கெனவே படித்த, பழைய மாண வர்கள், வெளிநாட்டில் பணி புரிகிற மாணவர்கள், அந்  தந்த பகுதியைச் சார்ந்த  தொழிலதிபர்கள் முன்வந்து இன்னும் அதிகமான நிதியை தருவர் என்ற நம்பிக்கை உள் ளது. நன்கொடை வழங்கு பவர்களுக்கு ரசீது வழங்கபபடுகிறது. அவர்கள் கட்டி டத்தைக் கட்டித் தருகையில், அவர்களுடைய பெயர்  கல்வெட்டில் பொறிக்கப் படும்.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். விழாவுக்கு தமிழக அர சின் தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக் கோட்டை), மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சு கம் பூபதி, மாவட்ட ஊராட்  சித் தலைவர் ஆர். உஷா  புண்ணியமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.