தஞ்சாவூர், மே 14 - தமிழ்நாடு கடல்சார் மீன் பிடித்தலை ஒழுங்குப்படுத் தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப் படகுகள் அனைத்தும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் நியமிக்கப்படும் பணியா ளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மீன்பிடி விசைப் படகுகளும் (பதிவு செய்யப்பட் டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) நேரடி ஆய்வு செய்யப்படவுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, மீன்பிடி கலன்கள் மே 25 மற்றும் 26 ஆகிய நாட்க ளில் ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், ஆய்வு செய்யப்படும் நாளில் படகு உரிமையாளர்கள் படகு களின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் பாஸ்புத்தகம், துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவி கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருந்து, ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத் தையும் விசைப்படகு உரி மையாளர்கள் அளித்திட வேண்டும். நேரடி ஆய்வின் போது காண்பிக்கப்படாத, பதிவு செய்யப்படாத படகுகளின் உரிமையாளர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். ஆய்வு நாள் அன்று படகினை ஆய்வுக்கு உட்படுத் தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக் கோரும், படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.