கும்பகோணம், மார்ச் 2 - கும்பகோணம் மாநக ராட்சி முதல் மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்பு விழா மாநகராட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. கும்பகோணம் மாநகராட்சி 34 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆ. செல்வம் உட்பட வெற்றி பெற்ற 48 மாநகராட்சி உறுப் பினர்களுக்கு கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், கட்சியின் மூத்த தலை வர் ஆர்.சி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கண்ணன், மாநகராட்சி செயலாளர் செந்தில்குமார், பழ.அன்புமணி, திமுக மாவட்ட செயலாளர் சு.கல்யா ணசுந்தரம், ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகராட்சி செயலாளர் சு.ப. தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.