districts

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கும்பகோணம், ஜன.12- கும்பகோணம் மாநகராட்சி பகுதி யில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கும்பகோணம் மாநக ராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கால் நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்  தல் ஏற்படுவதோடு பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக தெரிய வருகிறது. எனவே, மாநகராட்சி பகுதியில் சாலை யில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்  தும் வகையில் சுற்றி திரியும் கால்நடை களை முறையாக பராமரிக்காமல் சாலை களில் திரியவிடும் கால்நடைகளின் உரிமை யாளர்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.10 ஆயி ரமும் கன்று ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் அப ராதம் விதிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை போகுவரத் துக்கு இடையூறாக சாலைகளில் திரிய விடாமல் வீடுகளில் வைத்து பராமரிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

;