கடமலைக்குண்டு, பிப்.20- தஞ்சாவூர் மாவட்டம் பணையாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 42). இவர் சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இதே கம்பெனியில் வேலை செய்து வந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பன் கோவிந்தன் ஆகிய இருவரும் கடந்த மாதம் வெள்ளையப்பனை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது பொங்கல் விடு முறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எனக்கு பழக்கமான சிலர் 80 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்து 1 கோடிக்கு 2000 நோட்டுகளாக பெற்றதாக வெள்ளையப்பனிடம் கோவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாயை 2 ஆயி ரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக வும் அதை வெளிப்படையாக செலவு செய்ய முடி யாது என்பதால் அவருக்கு நெருக்கமான சிலர் மூலம் குறிப்பிட்ட தொகைக்கு 500 ரூபாய் நோட்டுக் களை பெற்றுக்கொண்டு அந்த தொகைக்கு அதிக மாக 2000 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த யுவன், கார்த்திக், சண்முகம் ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும் அவர்கள் 60 லட்சம் ரூபாய் அள விற்கு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தால் 2000 நோட்டுகளாக 75 லட்சம் ரூபாய் பெற்று தருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே பணம் தயார் செய்தால் தேனிக்கு சென்று 15 லட்சம் கூடுதலாக பெற்று வரலாம் என வெள்ளையப்பனிடம் ஆசை வார்த்தை கூறினர். தொடர்ந்து 1 வாரத்திற்கும் மேலாக வெள்ளையப்பனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் தயார் செய்யக்கூறி ஆசையை தூண்டியுள்ளனர். இவர்கள் பேசியதை நம்பிய வெள்ளையப்பன், அவர் பணிபுரியும் கம்பெனி முத லாளி முருகராஜ் உட்பட பலரிடம் பணம் பெற்று 60 லட்சம் ரூபாய் திரட்டினார். அதன் பின்பு கடந்த 4 ஆம் தேதி அதிகாலை வெள்ளையப்பன் சென்னையில் இருந்து காரில் தேனிக்கு கிளம்பினார். அவருடன் கம்பெனி உரிமையாளர் முருகராஜ் மற்றும் கம்பெனியில் பணி புரியும் மணிமாறன் ஆகியோர் காரில் வந்தனர். 5 ஆம் தேதி காலை தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு வெள்ளையப்பன் வந்துள்ளார். அங்கு ஏற்கனவே விஜயகுமார் மற்றும் அவரது நண்பன் கோவிந்தன் ஆகியோர் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களை ஏற்றி கொண்ட வெள்ளையப்பன் அருகில் இருந்த பேக்க ரிக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் விஜயகுமார் செல்போன் மூலம் வீரபாண்டியை சேர்ந்த கார்த்திக்கிற்கு தொடர்பு கொண்டு அவர்களை பேக்கரிக்கு அழைத்துள்ளார். சிறிது நேரத்தில் யுவன், கார்த்திக், சண்முகம் ஆகியோர் பேக்கரிக்கு சென்று வெள்ளையப்பனை சந்தித்தனர். அதன் பின்னர் 60 லட்சம் ரூபாய் பணம் எடுத்து வந்ததை உறுதி செய்து கொண்ட கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் மாலை கண்டமனூர் அருகே உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்பு வருமாறு கூறிவிட்டு சென்றனர். அதேபோல மாலை 4 மணிக்கு வெள்ளையப்பன் காரில் கண்டமனூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே சென்றார்.
அப்போது மற்றொரு காரில் அங்கு வந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் கல்லூரிக்கு அருகே தோட்ட பங்களாவிற்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் சென்னை பதிவெண் கொண்ட காரில் சென்றால் சந்தேகம் ஏற்படும். எனவே வெள்ளையப்பன் மற்றும் அவரது கம்பெனி உரிமையாளர் முருகராஜ் ஆகியோரை அவர்களது காரில் ஏற்றிக்கொண்டு தோட்ட பங்களா விற்கு சென்றனர். அரசு தொழில்நுட்ப கல்லூரியை கடந்து மலைச்சாலை வழியாக சென்று கொண்டி ருக்கும்போது கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி வெள்ளையப்ப னிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வெளியில் யாருக்கேனும் தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து அவர்களை மலைப் பகுதியில் இறக்கி விட்டு காரில் தலைமறைவாகினர். இது தொடர்பாக வெள்ளையப்பன் கண்டம னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டியை சேர்ந்த யுவன், கார்த்திக் ஆகிய இருவரை போலீ சார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர் .மேலும் இதில் தொடர்புடைய வீரபாண்டி யைச் சேர்ந்த சண்முகம் மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.