districts

img

வியாபாரிகளுக்கு இடம் இல்லை: வீணாகிய 10 டன் பூக்கள்

தஞ்சாவூர், டிச.14-  பூ வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய  இடம் கிடைக்காததால் செவ்வாயன்று 10 டன் பூக்கள் வீணாகின. பூச்சந்தையி லேயே பூக்களை விற்பனை செய்ய வியாபாரி களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. தஞ்சாவூர் விளார் சாலையில் சுப்பிர மணியர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 82 ஆண்டுகளாக பூச்சந்தை இயங்கி  வருகிறது. இந்நிலையில் பூ சந்தை உள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகளை அமைத்ததால், போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்பட்டது. இதையடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும், கோயிலுக்கு சொந்தமான இடத்  தில் மண் சுவர்களால் கட்டப்பட்ட கடைகள்  உள்ளதால், அந்த கடைகளின் கட்டுமானங் கள் பலவீனமடைந்து காணப்பட்டது. இதை யடுத்து கடைகளை புதிதாக கட்ட திட்டமி டப்பட்டது. பின்னர், மாநகராட்சி நிர்வாகம் சாலை யை அகலப்படுத்துவதாக கூறி சுமார் 20 அடி அகலத்துக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி டிசம்பர் 11-ஆம் தேதி சாலையோரம் இருந்த பூக்கடைகளை இடித்து அகற்றியது.  மேலும், அந்த இடத்தில் கடைகள் வைத்தி ருந்தவர்களை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வியா பாரம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனு மதித்தது. இதையடுத்து பூச்சந்தையில் இருந்த 60 கடைகளில் 40 கடைகள் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றன. மீத முள்ள கடைகள் பூச்சந்தையிலேயே செயல்  பட்டன.  இந்நிலையில், திங்களன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், அறநிலை யத்துறை அதிகாரிகள், பூ வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பூ வியாபாரிகள், பூச் சந்தையை குத்தகைக்கு எடுத்தவர்கள் அதிக அளவில் பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும், வெளியேறிய பூ வியா பாரிகளுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என கோரினர். இதே போல் பூச்சந்தை யிலேயே வியாபாரம் செய்யும் வியாபாரி கள், வெளியேறியவர்கள் மீண்டும் பூச் சந்தையில் வியாபாரம் செய்ய வர வேண் டும் என கூறினர்.  இதையடுத்து கோட்டாட்சியர் ரஞ்சித், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லா மல் அவரவர் விருப்பம் போல் பூ வியாபாரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், செவ்வாயன்று பழைய பேருந்து நிலையம் எதிரே பூ வியாபாரம் செய்யச் சென்ற வியாபாரிகளை, மாநகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரம் செய்ய அனுமதி மறுத்து விட்டனர். இதனால், சுமார் 10 டன் எடையுள்ள செவ்வந்தி, அரளி, சம்மங்கி, ரோஜா, செண்டி, மல்லிகை உள்ளிட்ட பூக்களை விற்க முடியாமல் வியாபாரிகள் கவலை அடைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று மேயர் சண்.ராமநாதனை சந்தித்த னர். அப்போது மேயர், அனைத்து வியா பாரிகளும் ஒற்றுமையாக இருந்து பூச்சந்தை யிலேயே வியாபாரத்தை நடத்துங்கள், உங்க ளுக்கு தேவையான இடம் அங்கு உள்ளது.  எனவே, நீங்கள் வேறு எங்கும் விற்பனை செய்ய முன் வர வேண்டாம்’’ என அறி வுறுத்தினார்.