districts

கும்பகோணம் அருகே கோயில் நிலத்தில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ.9- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள், குடியி ருப்போர் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பந்தலூர் கடைவீதியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட குழு உறுப்பினர் கலைமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க  மாநில பொருளாளர் துரைராஜ், மாவட்டத் தலைவர் ஜீவபாரதி, மாவட்ட செயலாளர் எம்.ராம், மாவட்ட பொருளாளர் எ. கொளஞ்சியப்பன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், கரும்பு  விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் காசிநாதன் உள்ளிட்டோர் பேசினர். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூ ரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் பன்னெடுங்கால மாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகுபடி செய்தும் குடியிருந்தும் வரு கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அற நிலையத்துறையினர், இவர்களை ஆக்கிர மிப்பாளர்கள் எனக் கூறி, குடியிருப்பு இடத்தை காலி செய்ய மிரட்டுகின்றனர். மேலும், அநியாய வாடகை உயர்வு, வாரி சுக்கு ஆர்டிஆர் மாற்றம் மறுப்பு என  பல்வேறு துயரங்களுக்கு ஆளாக்குகின்ற னர். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என வலி யுறுத்தினர்.