districts

நம்பிவயல் ஊராட்சியை திருவோணம் வட்டத்தில் இணைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜூன் 24 -  தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியை தனி தாலுகாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டதும், பட்டுக் கோட்டை வட்டத்தைச் சேர்ந்த நம்பிவயல் கிராமத்தை, தற்போது புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் இணைக்க திட்டமிட்டு அதற்கான நடவ டிக்கைகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நம்பிவயல் கிராமத்தை திருவோ ணம் வட்டத்தில் இணைக்க கூடாது, பட்டுக்கோட்டை வட்டத்திலேயே தொடர வேண்டும் என இப்பகுதி மக்கள்  வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், தமிழக அரசுக்கு கிராம மக்கள் சார்பில்  கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பட்டுக் கோட்டை - திருவோணம் சாலையில் நம்பிவயல் முதன்மைச் சாலையில், பொதுமக்கள் 50-க்கும் மேற் பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களை  சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிடச் செய்த னர்.  இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த உத யணன் என்பவர் கூறுகையில், “ஏற்கனவே நம்பி வயல் ஊராட்சி பட்டுக்கோட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்டதாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில், தொகுதி  மறுசீரமைப்பின் போது, நம்பிவயல் ஊராட்சி பேரா வூரணி சட்டமன்றத்தில் இணைக்கப்பட்டது.  தற்போது நம்பிவயல் ஊராட்சியை திருவோணம் வட்டத்தில் இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக ஊராட்சி ஒன்றிய அலு வலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலு வலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மருத்து வமனை ஆகியவற்றிற்கு பட்டுக்கோட்டைக்கு சென்று  வருகிறோம். காவல் நிலையத்திற்கு திருவோணத்திற் கும், மின்வாரிய அலுவலகத்திற்கு ஊரணிபுரம் கலி ராயன்விடுதிக்கும், சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க பேராவூரணிக்கும் என ஒவ்வொரு பகுதியாக அலைய வேண்டிய நிலை உள்ளது.  எனவே, நம்பிவயல் கிராமம் பட்டுக்கோட்டை வட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.