தஞ்சாவூர், ஜூலை 9 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை புனித தாமஸ் பள்ளியில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” சார்பில், நகராட்சி ஆணையர் (பொ) எல்.குமார் உத்தரவின் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு, “என் குப்பை என் பொறுப்பு” என்பதை நடைமுறைப் படுத்தும் பொருட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இதில், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதன் அவசியம் குறித்தும், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, பொது இடங் களில் எச்சில் துப்பாமல் இருப்பது, நெகிழி பயன்பாட் டினை தவிர்ப்பது, துணிப்பையை பயன்படுத்துவது, சமுதாய மற்றும் பொது கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், பான் செக்கர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் “என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறப்பாக வரையப்பட்ட மூன்று ஓவியங்களுக்கு நக ராட்சி சார்பில் பரிசும் சான்றிதழும் ஜூலை 13 (புதன்) அன்று வழங்கப்படும். மேலும், அந்த ஓவியங்கள் நக ராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஓவியமாக வரைய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆணையர் கூறுகையில், “இது போன்ற விழிப்பு ணர்வு பணிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஜூலை 13 அன்று காலை 7.30 மணியளவில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பழனியப்பன் தெரு, மணிக் கூண்டு, அறந்தாங்கி முக்கம், தஞ்சை சாலை, கடைத் தெரு மேல் பாகம், கடைத்தெரு கீழ் பாகம் வழியாக நடத்தப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளலாம்” என்றார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மூலம் நடத்தப்பட்டது.